Friday, 3 January 2014

அந்த நடிகை ஆரம்பத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது சைடு ஆக்டிங்க்காக முயற்சி செய்து கொண்டிருந்தாராம். கொஞ்ச நாளில் ஏதோ ஒரு மாடலிங் கம்பெனியின் கண்களில் பட மீடியாவின் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். அந்த மாடலிங் கம்பெனியும் அவருக்கு நடிகையோடு வரும் தோழிக் கதாபாத்திரம், ஒரு காட்சி, இரண்டு காட்சி என்று தலையைக் காட்ட வாய்ப்புகளை பெற்றுத் தந்திருக்கிறது. ஆனால் அதற்கே வாரா வாரம் பார்ட்டி கொடுக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து இருக்கிறார்.
இதே போல, பார்ட்டிக்குச் சென்று கொண்டிருந்தால் சக்கையாகத்தான் வெளியே வருவோம் என்று எண்ணி வேறு வழிகளில் முன்னனியில் வர என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க பளிச்சிட்டிருக்கிறது ஒரு ஐடியா.
பிரபலமான இயக்குனரிடம் வேலை செய்து கொண்டிருந்த உதவி இயக்குனரைப் பிடித்து இருக்கிறார். உதவி இயக்குனர்களைப் பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே? அடிமையை விடக் கேவலமாய் வாழ்வில் முன்னேற துடித்துக் கொண்டிருக்கும் பாவ ஆத்மாக்கள் அல்லவா அவர்கள். அந்த வலியையே மனதுள் வைத்து முன்னேறுவது சிலர் தான். அந்த வலி தாங்காமல் விரக்தியாய் தவறு செய்ய ஆரம்பிப்பது பலர். சரி இந்த உளவியல் பிரச்சினை இப்போது நமக்கு வேண்டாம்.
அந்த உ.இக்கு தேவையான பண உதவி, அவ்வப்போது உடல் உதவி என்று அவரைத் தன் பிடிக்குள் கொண்டு வந்திருக்கிறார் நடிகை. அந்த உ.இயும் நடிகையின் மீது கொலை வெறி அன்பு கொண்டு தான் வேலை பார்த்த இயக்குனரிடம் அவ்வப்போது நடிகையைப் பற்றிச் சொல்லிச் சொல்லி அசைத்திருக்கிறார். இயக்குனரும் சற்றே அசர, நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நடிகையும் இயக்குனரைச் சந்திக்க சென்றிருக்கிறார். இயக்குனருக்கு கொடுத்த அன்பளிப்புகளால் உள்ளம் குளிர்ந்த அவர் தன் அடுத்த படத்தில் ஹீரோயினாக வாய்ப்புக் கொடுத்தார்.
ஆரம்பத்தில் நடிகையின் படம் ஒன்றும் அவ்வளவு பிரமாதமாக செல்லவில்லை. என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.read more to click


0 comments: