உக்ரைன்: உக்ரைன் நாட்டில் மலேசிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 280 பயணிகள் மற்றும் 15 ஊழியர்களும் பயணம் செய்துள்ளனர். ஆம்ஸ்ட்டர்மனில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சென்ற போது விபத்திற்குள்ளானது. மலேசிய விமானம் ஏவுகணை மூலம் தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆம்ஸ்டர்மில் இருந்து கோலாலம்பூர் சென்ற போது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தீவிரவாதிகள் விமானத்தை சுட்டூ வீழ்த்தியதாக உக்ரைன் அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.
10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது விமானம் ரஷ்ய ரேடாரிலிருந்து மாயமானது. 33 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்த போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உக்ரைன் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment