Monday 1 July 2013

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கோச்சடையான் திரைப்படம் ரசிகர்களுக்கு மிகெப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் கோச்சடையான் படக்குழு தெளிவாக இருக்கிறது. மோஷன் கேப்சூரிங் டெக்னாலஜி, ஆரோ 3D இசை என திரைப்படத்தில் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு கோச்சடையான் திரைப்படத்தில் ரஜினி கடலில் உள்ள சுறா மீன்களுடன் சண்டைபோடுவதாக செய்தி பரவியது. கேன்ஸ் திரைப்ப்ட விழாவில் டிரெய்லர் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்கள் இந்த செய்திகேட்டு மறுபடியும் கோச்சடையான் பற்றிய தகவல்களை இணையங்களில் தேடத் துவங்கினர்.
ஆனால் கோச்சடையான் திரைப்படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின் ‘ரஜினி சுறாவுடன் சண்டை போடுவதாக வெளியான செய்தியை மறுத்திருக்கிறார். சமீபத்தில் பிரபல ஆங்கில இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த சௌந்தர்யா அஸ்வின் “கோச்சடையான் சுறாவுடன் சண்டை போடுவதாக வெளியான தகவல் பொய். டால்ஃபின்களுடன் நீந்துவது போல் காட்சி இருக்கிறதே தவிர அவை சுறாக்கள் அல்ல.
ஆனால் மற்ற மிருகங்களுடன் சண்டையிடும் காட்சிகள் இருக்கின்றன. முதலில் ரிலீஸ் தேதியை உறுதி செய்துவிட்டுத்தான் டிரெய்லர், இசை வெளியிடுவது குறித்து முடிவுகள் எடுக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.

0 comments: