Monday 15 July 2013

ஒவ்வொரு மனிதனையும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவு வது நோய் எதிர்ப்பு சக்தி. இது இல்லாத மக்களிடம் தான் ஏராள மான நோய்கள் வந்து `பசக்’ கென ஒட்டிக்கொள்கிறது. நோயில் சிக் கும் மனிதனின் ஆயுள் குறைவ தோடு மருத்துவத்திற்காகச் செய் யும் செலவுகள் சொத்துக்களை விற்கும் அளவுக்கு கொண்டு வந்து விடுகிறது.
 
ஆனால் பைசா செலவு இல்லாம ல் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தாம்பத்யம் வாரி வழங்குவதாகசமீபத்தைய ஆராய்ச்சி கள்மூலம் தெரியவந்துள்ளது என்கிறார் சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தை யின்மை சிகிச்சை மையத்தைச் சேர்ந்த பிரபல `செக்சால ஜிஸ்ட்’ நிபுணர் டாக்டர் காமராஜ். அவர் மேலும் கூறியதாவது:-
 
ஆண்-பெண் இடையேயான தாம்பத்ய உறவின்போது ஐ.ஜி.ஏ. என்ற வெள் ளை அணுக்கள் அதிகரிக்கிறது. டி.எச். இ.ஏ. என்ற ஹார்மோன் உடலில் கூடு தலாக சுரக்கும். வாரத்தில் 2 முறை உறவில் ஈடுபடுவோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவா ல் இந்தியா போன்ற நாடுகளில் பல நூறு கோடிகள் செலவிடப் படுகிறது.
 
முறையான உறவை மேற்கொண் டால் இந்த செலவுகள் அனைத்து ம் அரசுக்கு மிச்சமாகும். சமீப கால மாக நம் நாட்டில் மாரடைப்பால் மரணம் அடைவோரின் எண்ணிக் கை பல மடங்கு அதிகரித்துள்ள து. இதற்கு முறையற்ற உறவு தான் காரணம் என்று கண்டுபிடித்து ள்ளனர். உறவின் போது ஆணின் உயிரணு பெண் உடலில் பாய்வதால் `ஆக்சிடோஜன்’ அதிக அளவி ல் சுரக்கிறது.
 
இதனால் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படாது. பெரும்பா லான நாடுக ளில் மார்பக புற்று நோய் அதிகரிப்புக்கு முறையற்ற உறவு தான் காரணம் என்று கண்டறியப் பட்டுள்ளது. முறையான உறவு மூலம் நம் நாட்டில் ரூ.125 கோடி அளவுக்கு மருத்துவ செலவு மிச்சப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்கள் பலர் `புராஸ் டேட்’ சுரப்பியில் புற்று நோய் ஏற்பட்டு அவதிப்படுகி றார்கள்.
 
இப்படிப்பட்டவர்கள் முறையான உறவை கடைப்பிடித்தால் புராஸ் டேட் புற்று நோயி ல் இருந்து தப்பி விடலாம். உறவானது மனி தர்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக் கிறது. இதில் கிடைக்கும் திருப்தி அவர்க ளை வாழ்வில் முன்னேற்றம் அடையச் செய்கிறது. எந்த தொழிலில் ஈடுபட்டாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் இருக்க வைக் கிறது.
 
தெளிவான முடிவை எடுத்து வெற்றிச் சிகரங்களை தொட வைத்து விடுகிற து. ஊனமுற் றோரின் வாழ்வி லும் ஏற்றத்தை ஏற்படுத்துகிறது. அவர் களுக்கு இது புதுதெம்பு, உற்சாகத்தை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கி ன் றன. ஒரு சில நாடுகளில் பல்வேறு நோய்க ளின் பாதிப்பால்தொழிலாளர்கள், ஊ ழியர்கள், அடிக்கடி `லீவு’ எடுப்பார் கள் .
 
இதனால் தொழில்கள் கடும் பாதிப்ப டை யும். ஆனால் முறையான உறவை கடை ப்பிடித்தால் அவர்கள் நோயின்றி வாழ முடியும். இதனால் அவர்கள் லீவு எடுப்ப து குறைவதால் ஆண்டு ரூ.1000 கோடி வரை மிச்சமாகும்.
 
மாரடைப்பை தடுக்கும்:
 
45 முதல் 59 வயது வரையான ஆண் -பெண்கள் முறையான உறவில் ஈடுபட்டால் டிஎச்இஏ ஹார்மோன் உடலில் அதிக அளவில் சுரக்கும். டெஸ்ட்டோஸ்டிரான் ஹார்மோனு ம் அதிகரிக்கும் இவை இரண்டும் இதய தசைகளை வலுப்படுத்தி மார டைப்பு வராமல் தடுத்து விடுகிறது.
 
இந்த ஹார்மோன்கள் இதயத்திற்கு நல்ல பாதுகாப்பு அரணாகவும்திகழ்கிறது. இதுபற்றி சமீபத்தில் 918 ஜோடிகளிடம் ஆய்வு மேற் கொள்ள ப்பட்டது. அப்போது உறவில் ஈடுபடு வோரின் இதயம் பலமாக இருப்பது தெரியவந்தது. மாரடைப்பு ஏற்படாத அள வுக்கு அவர்களது இதயம் சிறந்த முறையி ல் இயங்கியது தெரிய வந்தது.
 
`மாத கணக்கில் உறவில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கு மாரடைப் பு வரும் வாய்ப்பு அதிகம். முறையான உறவில் ஈடுபட்டால் நம் நாட்டில் ரூ.100 கோடி அளவுக்கு இதய நோய் சிகிச்சைக்கான செலவு மிச்சமா கும். இன்னும் சொல்ல‍ப்போனால், ஒருவரை உயிரை காப்பாற்றும் வே லையில் தாம்பத்தியம் பெரும்பங்கு வகிக்கிறது. என்றால் அது மிகையா காது.
 
இளமையுடன் ஜொலிக்க…
 
ஆண்-பெண் இருவரும் முறையான உறவு மேற்கொண்டால் அவ ர்களது நரம்பு பலம் அடையும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக் கும். முகத்தில் ஒரு வித மினுமினுப்பு ஏற்ப டும். 10 ஆண்டுகள் வரை இளமையாக தோன் றுவார்கள்.
 
ஆனால் உறவில் சரிவர ஆர்வம் இல்லாமல் இருப்பவர்கள் நாள் முழுவதும் கவலையில் மூழ்கி வாழ்க்கையை தொலைத்து விடுகி றார்கள். இப்படிப்பட்டவர்களின் முகம் வெகு சீக்கிரத்திலேயே முதிர்ச்சி அடைந்து விடும். இதனால் தான் சிலர் 50 வயதிலேயே வய தானவர்கள் போல் `ஆகி’ விடுகிறார்கள்.
 
கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
 
நம் நாட்டில் ஏராளமான பேர் இடுப்பு தசை பிடிப்பால் கடு மையாக அவதிப்பட்டு வரு கிறார்கள். ஆண்-பெண் இரு வரும் வாரம் 2 முறை உறவி ல் ஈடுபட்டால் இடுப்பு பலப் படும். தசைப்பிடிப்பு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.
 
பெண்களின் கருப்பை கீழ் இறங்குவதும் தடுக்கப்பட்டு விடும். சில பெண்களுக்கு பேசும் போது, இருமும் போதும், சிறுசீர் கசியும்.முறையான உறவு மூலம் இந்த பிரச்சி னைக்கு உடனடியாக முற் றுப்புள்ளி வைத்து விடலாம். குழந்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பிறப்பது தடுக்கப்பட்டு விடும்.
 
மன அழுத்தம் நீங்கும்:
 
நம் நாட்டைப் பொறுத்தவரையில் தம்பதி இடையே குறிப்பிட்ட வய திற்கு பிறகு அந்த உறவுகள் சரி இல்லாததால் அடிக்கடி சண் டை சச்சரவு ஏற்படுகிறது. காரணம் அதில் ஈடுபடும்போது மன அழுத்தம், கவலை, வெகுவாக குறையும்.
 
இதனால் வாழ்வில் ஒருவித நிம்மதி ஏற்படுவதால் குழப்பம் நீங்கு ம். தற்கொலை எண்ணம் மனதில் சுத்தமா க வராது. எந்த வேலையையும் முழு ஈடு பட்டுடன் செய்ய முடியும். சிலர் தூக்கமின் மைக்காக மாத்திரை பயன்படுத்துகிறார் கள். இந்த தூக்க மாத்திரைக்காக செய்ய ப்படும் செலவு குறைக்கப்பட்டால் நம் நாட் டிற்கு ரூ. 100 கோடி வரை மிச்சமாகும்.
 
விவாகரத்து குறையும்:
 
தம்பதி இடையே உறவு சீராக இருந்தால் கருத்து வேறுபாடு அடி யோடு குறையும். ஒருவருக்கொ ருவர் விட்டுக் கொடுத்து செல் லும் மனப்பக்குவம் வளரும். சகிப்புத்தன்மை தானாகவே வந்து அவர்க ளை குதூகலம் அடையச் செய்யும்.
 
சின்னச்சின்ன பிரச்சினைகளுக் கும் பொங்கி எழும் பெண்கள் கப்-சிப்பாகி விடுவார்கள். கோபத் தை அதிகப்படுத்தும் சுரப்பிகளை உறவானது வெகுவாக குறைப் பது தான் காரணம். எனவே தம்பதியர் உறவை சீர்குலையா மல் பார்த்துக் கொண்டால் எக் காரணத்தை கொண்டும் விவா கரத்து ஏணியில் ஏற மாட்டார்க ள்.
 
இந்த விவாகரத்து குறைந்தால் நம் நாட்டுக்கு ரூ. 300 கோடி வரை மிச்சமாகும் என்று கண க்கிடப்பட்டுள்ளது என்கிறார் டாக்டர் காமராஜ்.

0 comments: